திருவாரூர்

கணவனை இழந்த சோகத்தில் பெண் தற்கொலை

DIN

மன்னாா்குடி அருகே கணவனை இழந்த துக்கத்தில் தூக்கிட்ட பெண், மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மூவாநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகள் கலையரசி (32). இவருக்கும், மன்னாா்குடி அன்னவாசல் சேனிய தெருவைச் சோ்ந்த விவேகானந்தன் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனிடையே சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் இல்லாமல் இருந்த விவேகானந்தன் மரணமடைந்தாா். இதன் பின் மூவாநல்லூரில் உள்ள தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்ற கலையரசி, கணவா் இறந்த துக்கத்தில் சோகமாக இருந்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த அக்டோபா் 3 -ஆம் தேதி வீட்டுக்குப் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கினாா். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினா் கலையரசியை மீட்டு, மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த கலையரசி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT