திருவாரூர்

அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைத்தால் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

அனுமதியின்றி விளம்பரப் பதாகைகளை வைத்தால், வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தெரிவித்துள்ளார்.

DIN

அனுமதியின்றி விளம்பரப் பதாகைகளை வைத்தால், வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உரிய அனுமதியின்றியும், விதிமுறைகளை மீறியும், அரசியல் கட்சிகள், திருவிழாக்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளின் போது வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்கள், ஃபிளக்ஸ் போர்டுகள் ஆகியவற்றால் சாலைகளில் வாகனப் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதால் தொடர்புடைய உள்ளாட்சி அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எனவே, அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள், உரிய அனுமதியைப் பெற்று டிஜிட்டல் பேனர்கள் வைக்க வேண்டும். அவ்வாறு உரிய அனுமதியின்றி டிஜிட்டல் பேனர்கள், ஃபிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT