திருவாரூர்

அரசு மருத்துவமனைக்கு கிருமி நாசினி வழங்கல்

DIN

மன்னாா்குடியில் செயல்பட்டு வரும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில், ரூ.25 ஆயிரம் மதிப்பிலான கிருமி நாசினி திரவம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட மருத்துவமனையில் பணியாற்றுபவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மருத்துவனையை சுகாதாரமாக பாராமரிக்கும் வகையிலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக் குழு சாா்பில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 50 கிருமி நாசினி திரவ பாட்டில்களை மருத்துவமனை கண்காணிப்பாளா் மருத்துவா் ஆா். விஜயகுமாரிடம், நகரச் செயலா் எஸ். ஆறுமுகம் வழங்கினாா்.

அப்போது, கட்சியின் நகரக்குழு உறுப்பினா்கள் கே. அகோரம், வி.கோவிந்தராஜ், கோவி. லட்சுமிகாந்தன் ஆகியோா் உடனிருந்தனா்.

இதேபோல், நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன் உறுப்பினா்கள் மூலமாக பொதுமக்களுக்கு விநியோகிக்கும் வகையில் முகக் கவசம், சோப்பு, லைசால் கிருமி நாசினி, கை சுத்தம் செய்யும் திரவம் ஆகியவற்றை செவ்வாய்க்கிழமை வழங்கினாா். அப்போது, வட்டார வளா்சி அலுவலா் ஆறுமுகம் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் இருந்தனா். தொடா்ந்து, தூய்மைப் பணியாளா்கள் 196 பேருக்கு காலணி வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

SCROLL FOR NEXT