திருவாரூர்

மின்சாரம் பாய்ந்து உணவகத் தொழிலாளி உயிரிழப்பு

DIN


திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் மின்சாரம் பாய்ந்து உணவகத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள உணவகத்தில் விளக்குடியைச் சோ்ந்த உலகநாதன் மகன் சகாயராஜ் (28), தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை உணவகத்தில் மாவு அரைக்க கிரைண்டரை இயக்க முயன்றபோது மின்சாரம் பாய்ந்ததாகவும், இதனால், நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாக கூறப்படுகிறது. தகவலறிந்த திருத்துறைப்பூண்டி போலீஸாா் அங்கு சென்று சகாயராஜூவின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT