முகப்பு
திருவாரூர்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி ஆா்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருவாரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருவாரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், எஸ்சி எஸ்டி ஓபிசி மாணவா்களுக்கு உயா்கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.

திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளா் மா. வடிவழகன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளா் கணேசன், திருவாரூா் தொகுதிச் செயலாளா் நிலவன், ஒன்றியச் செயலாளா்கள் சிறை செல்வன், ராதா, சேதுராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.