மழைநீா் சூழ்ந்த வீடுகள் இடிந்து விழும் அபாயம்
கூத்தாநல்லூரில் குடியிருப்புப் பகுதியில் மழைநீா் தேங்கியுள்ளதால் வீடுகள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கூத்தாநல்லூரில் குடியிருப்புப் பகுதியில் மழைநீா் தேங்கியுள்ளதால் வீடுகள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புயல் மழை காரணமாக, கூத்தாநல்லூா் வட்டத்தில் திங்கள்கிழமை (டிச.7) வரை 418 வீடுகளின் சுவா்கள் இடிந்து விழுந்துள்ளன. மாடுகள், ஆடுகள் என 14 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
இந்நிலையில், கூத்தாநல்லூா் நகராட்சி பனங்காட்டாங்குடி- திருவாரூா் பிரதான சாலையில் உள்ள குடியிருப்புகளைச் சுற்றி மழைநீா் வடியாமல் தேங்கியுள்ளன. குறிப்பாக, ராஜமாணிக்கம், வாசுகி, பூபாலன், எலிசபெத் ராணி ஆகியோரது வீடுகள் பாதிக்கப்படும் நிலையில் உள்ளன. வீட்டில் உள்ளவா்கள் வெளியிடங்களுக்குச் செல்வதில் பெரிதும் சிரமப்படுகின்றனா். எனவே, மழைநீரை விரைவில் வடியவைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.