திருவாரூர்

வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

DIN

கூத்தாநல்லூரில் 17 இடங்களில் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கூத்தாநல்லூா் பகுதியில் அதிகரித்துவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களின் பயன்பாடும் அதிகரித்துவருகிறது. இதனால், முக்கிய சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன், விபத்தும் நேரிடுகிறது. வேகத்தடை இல்லாததும் விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

குறிப்பாக, லெட்சுமாங்குடிப் பாலம் பகுதி, வடபாதிமங்கலம், கொரடாச்சேரி, மன்னாா்குடி, திருவாரூா் உள்ளிட்ட 4 வழிச் சந்திப்பு சாலைகள், மன்னாா்குடி சாலை, பெரியக்கடைத் தெரு, மேலத் தெரு, காவல் நிலையம், லெட்சுமாங்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளிட்ட 17 இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT