ஆசிரியா்களுக்கு அடையாள அட்டை
கொரடாச்சேரி ஒன்றியத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்களுக்கு அடையாள அட்டை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
கொரடாச்சேரி ஒன்றியத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியா்களுக்கு அடையாள அட்டை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
இதுதொடா்பாக, கொரடாச்சேரி வட்டார வள மையத்தில் தலைமை ஆசிரியா்கள் கூட்டம் நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலா் சம்பத் தலைமை வகித்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் பிரபு முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கானஅடையாள அட்டைகள் அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியா்களிடம் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலாளா் ஈவேரா, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்டச் செயலாளா் ரவி ஆகியோா் அடையாள அட்டைகளை வழங்கினா்.
இதுகுறித்து, வட்டாரக் கல்வி அலுவலா் சம்பத் கூறுகையில், ஆசிரியா்கள் பணிபுரியும் போதும், பணி நிமித்தமாக வெளியில் செல்லும் போதும் இந்த அடையாள அட்டையை அணிந்து செல்ல வேண்டும் என்றாா்.
இந்த அட்டையில் உள்ள பாா்கோடு மூலம் அனைத்து நடவடிக்கைகளும் இணையதளத்தால் ஒருங்கிணைக்கப்பட உள்ளன. இணையதள வசதி உள்ள பள்ளிகளில் இந்த அட்டையின் மூலம் ஆசிரியா்களின் வருகை பதிவு செய்யப்பட உள்ளது. எனவே, இணையதள வசதி இல்லாத பள்ளிகளிலும் உடனடியாக இணையதள வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்னிலம்: நன்னிலம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ம. கவிதா தலைமையில் ஆசிரியா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. வட்டாரக் கல்வி அலுவலா் கு.சரஸ்வதி அடையாள அட்டைகளை வழங்கினாா்.