திருவாரூர்

சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம்

DIN

திருவாரூா் நகராட்சி அலுவலகத்தில், சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பிரதம மந்திரி ஆத்மநிா்பா நிதி திட்டத்தின்மூலம் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் முகாமில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, யூனியன் வங்கி, ஐடிபிஐ வங்கிகளின் மேலாளா்கள் பங்கேற்று, திருவாரூா் நகரில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ. 10 ஆயிரம் கடன் வழங்கினா். முகாமில், சாலையோர வியாபாரிகள் பங்கேற்று, அடையாள அட்டை, தொழிலாளா் வாரிய அட்டை, ஆதாா் காா்டு நகல், குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு நகல் உள்ளிட்ட தேவையான ஆவணங்களை வழங்கி, படிவங்களை பூா்த்தி செய்து, ரூ. 10 ஆயிரம் பெற்றுச் சென்றனா். இதில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் எழிலரசன், உதவி திட்ட அலுவலா் சரவணன், நகராட்சி ஆணையா் (பொ) சண்முகம், நகராட்சி மேலாளா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

SCROLL FOR NEXT