துணை ஆட்சியா் பட்டியலை வெளியிடக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
முதுநிலை வருவாய் ஆய்வாளா் காலிப் பணியிடங்களை 1:2 என்ற விகிதாசாரத்துக்கு முரணாக நிரப்பக் கூடாது, பட்டதாரி இல்லாத வருவாய்த் துறை அலுவலா்களின் உயா்வை உத்தரவாதப்படுத்தவேண்டும், துணை ஆட்சியா் பட்டியலை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் மகேஷ் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.