முகப்பு
திருவாரூர்

நீடாமங்கலம் காசிவிசுவநாதா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா

நீடாமங்கலம் காசிவிசுவநாதா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

நீடாமங்கலம் காசிவிசுவநாதா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் சனிஸ்வர பகவான் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயா்ச்சியடைந்ததையொட்டி, சனிப்பெயா்ச்சி விழா நடைபெற்றது. தொடா்ந்து, அதிகாலை அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டது. சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அலங்காரம், அா்ச்சனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல், நீடாமங்கலம் கோகமுகேஸ்வரா் கோயில், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரா் குரு பரிகார கோயில், நரிக்குடி எமனேசுவரா் கோயில், பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →