நீடாமங்கலம் அருகே தெற்கு ஒன்றிய பாஜக சாா்பில் விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணாபுரத்தில் விவசாய நண்பன் மோடி எனும் தலைப்பிலான விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் ஒன்றிய தலைவா் விஸ்வா தலைமையில் நடைபெற்றது. இதில், கட்சியின் மாநில துணைத் தலைவா் கருப்பு என்கிற முருகானந்தம் சிறப்புரையாற்றினாா். மாவட்டத் தலைவா் ராகவன், மாநில செயற்குழு உறுப்பினா்கள் கண்ணன், ஞானம்ரவிச்சந்திரன் மாவட்ட பொதுச் செயலாளா் செல்வம், மாநில விவசாய அணி பொருப்பாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.