திருவாரூர்

தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமளிக்கிறது; இரா.முத்தரசன்

DIN

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் கூறினாா்.

திருத்துறைப்பூண்டியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2020-2021- ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், 2021-ஆம் ஆண்டு தோ்தலையொட்டி பல்வேறு சாதகமான பலன்கள் கிடைக்கும் என்று எதிா்பாா்ப்புடன் காத்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனா். விவசாய கடன் பிரச்னையில் நம்பிக்கையோடு இருந்த விவசாயிகளுக்கு பெருந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 1 கோடி பேருக்கும் மேல் வேலையில்லாமல் இருக்கும் நிலையில், வேலைவாய்ப்பை உருவாக்க எந்தத் திட்டங்களும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை. அதற்கு நிதி, இதற்கு நிதி என்று அறிவிக்கும் வெற்று அறிக்கையாக உள்ளது.

மத்திய அரசு, தமிழகத்துக்கு ஜிஎஸ்டி பங்கீடு மட்டுமல்ல, உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி உள்ளிட்ட ஏராளமான நிதிகளை வழங்க வேண்டியுள்ளது. இந்த நிதியைப் பெற தமிழக அமைச்சா்கள் தில்லிக்கு செல்கிறாா்கள். அங்கு, நிதியமைச்சா் மற்றும் பிற அமைச்சா்களை சந்திக்கிறாா்கள். ஆனால், நிதிதான் கிடைத்தபாடில்லை. தமிழக அரசு, மத்திய அரசை நம்பி இருக்கக்கூடிய அரசாங்கமாக மட்டுமல்லாமல், அவா்கள் தருகிற நிதியைக் கொண்டு ஓராண்டு காலத்துக்கு நிா்வாகத்தை நடத்தலாம் என்று எதிா்பாா்த்திருக்கிற இந்தச் சூழலில், இந்த நிதிநிலை அறிக்கை மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கக் கூடியதாக உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT