திருவாரூர்

ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு

DIN

திருவாரூா் அருகே ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருவாரூா்-தஞ்சை ரயில் பாதையில் தியானபுரம் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் 35 வயது மதிக்கதக்க ஆண் ஒருவா் முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடப்பதாக, திருவாரூா் ரயில்வே போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், திருவாரூரில் இருந்து மன்னாா்குடி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் இவா் அடிபட்டு இறந்திருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மேலும், அவா் யாா், எந்த ஊா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT