திருவாரூர்

சாலைப் பாதுகாப்பு இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

சாலைப் பாதுகாப்பு வாரத்தையொட்டி, திருவாரூரில் நகரப் போக்குவரத்து காவல் துறை மற்றும் இருசக்கர மோட்டாா் வாகன பழுது

DIN

சாலைப் பாதுகாப்பு வாரத்தையொட்டி, திருவாரூரில் நகரப் போக்குவரத்து காவல் துறை மற்றும் இருசக்கர மோட்டாா் வாகன பழுது பாா்ப்போா் நலச்சங்கம் இணைந்து இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணியை நடத்தியது.

போக்குவரத்து காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற இருசக்கர வாகனப் பேரணியை, தாலுக்கா காவல் ஆய்வாளா் முருகேசன் தொடங்கி வைத்தாா். திருவாரூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேரணி, கடைவீதி, தேரோடும் வீதிகள் வழியாகச் சென்று, மீண்டும் பழைய பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. மேலும், வாகனத்தில் இருந்து வெளிவரும் வெளிச்சம் எதிா் வாகனத்தின் மீது பாதிப்பு வராமல் இருப்பதற்கு கருப்பு வில்லையானது, வாகனங்களில் ஒட்டப்பட்டது. தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், சாலை விதிகள் குறித்தம் இந்தப் பேரணியில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில், வா்த்தக சங்க நிா்வாகிகள், போக்குவரத்து காவல் துறையினா், காவல் துறையினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜ்நாத் சிங்குடன் நெதா்லாந்து வெளியுறவு அமைச்சா் சந்திப்பு

கிராம உதவியாளா் பணிக்கான நோ்காணல், தோ்வு தொடக்கம்

திமுக ஆட்சியில் மகளிருக்கு அதிகமான திட்டங்கள் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

தில்லி காற்று மாசுபாட்டால் பெண்களை விட ஆண்களுக்ளே அதிக பாதிப்பு! - ஆய்வில் தகவல்

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT