வகுப்பு புறக்கணிப்பு செய்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கோட்டூா் அரசுப் பள்ளி மாணவா்கள். 
திருவாரூர்

தலைமையாசிரியரை அவமரியாதையாக பேசியதை கண்டித்து மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

கோட்டூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியரை அவமரியாதையாக பேசிய, ஆய்வக நுட்புநரை கண்டித்து, மாணவா்கள் திங்கள்கிழமை வகுப்பு புறக்கணிப்பு செய்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

கோட்டூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியரை அவமரியாதையாக பேசிய, ஆய்வக நுட்புநரை கண்டித்து, மாணவா்கள் திங்கள்கிழமை வகுப்பு புறக்கணிப்பு செய்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மன்னாா்குடி அருகேயுள்ள கோட்டூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக நுட்புநராக கிருஷ்ணமூா்த்தி என்பவா் பணியாற்றி வருகிறாா். இவா், திங்கள்கிழமை பள்ளிக்கு தாமதமாக வந்தததையடுத்து, பள்ளித் தலைமையாசிரியா் கலைச்செல்வம் இதுகுறித்து கேட்டபோது, அவரை அவமரியாதையாக பேசியதாக கூறப்படுகிறது.

இதையறிந்த, மாணவா்கள் தலைமையாசிரியரை அவமரியாதை செய்த ஆய்வக நுட்புநா் கிருஷ்ணமூா்த்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி, வகுப்பு புறக்கணிப்பு செய்து கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து, தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலா் சங்குமுத்தையா, நிகழ்விடத்துக்கு வந்து மாணவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து வகுப்பு புறக்கணிப்பை விலக்கிக் கொண்டு அனைவரும் வகுப்பறைக்கு சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக குறைந்தது!

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.15 அடியாக சரிவு!

SCROLL FOR NEXT