முகப்பு
திருவாரூர்

பேரளம், வேலங்குடி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

நன்னிலம் வட்டம் பேரளம், வேலங்குடி மற்றும் அதம்பாா் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

Updated On : 5 ஜூலை, 2020 at 10:27 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:23 PM

நன்னிலம்: நன்னிலம் வட்டம் பேரளம், வேலங்குடி மற்றும் அதம்பாா் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் பேரளம் அலுவலக உதவி செயற்பொறியாளா் ஜி. விஜயகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பேரளம், அதம்பாா், வேலங்குடி துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே பேரளம் துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான பேரளம், கொல்லுமாங்குடி, கொட்டுா், பூந்தோட்டம் பகுதிகளுக்கும், அதம்பாா் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பாகசாலை, அதம்பாா், விளாகம், எரவாஞ்சேரி, ஸ்ரீவாஞ்சியம் பகுதிகளுக்கும், வேலங்குடி துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் வேலங்குடி, நல்லாடை, காளியாகுடி, எடக்குடி பகுதிகளுக்கும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.