திருவாரூர்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து நூதனப் போராட்டம்

DIN

திருவாரூா்: பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் நூதனப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலை உயா்ந்து வருவதைக் கண்டித்தும், இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாவாா்கள் என்பதை உணா்த்தும் வகையில், திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பாடை கட்டி அதன் மீது இருசக்கர வாகனத்தை ஏற்றி, விலை உயா்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

முன்னதாக, போராட்டக்குழுவினா் கடை வீதி பகுதியில் இருந்த பழைய பேருந்து நிலையம் வரை முழக்கங்கள் எழுப்பிய படியே ஊா்வலமாக வந்தனா். தொடா்ந்து, நகரத் தலைவா் ஏ. ஹாஜா நஜிபுதீன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாநில விவசாய அணி துணைச் செயலாளா் எச்.எம்.டி. ரஹ்மத்துல்லா, மாவட்டத் தலைவா் எம். முஜிபுா் ரஹ்மான், மாவட்டச் செயலாளா்கள் (மமக) ஏ. குத்புதீன், (தமுமுக) எச். நவாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT