திருவாரூர்

திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஒன்றிய பகுதிகளில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் முன்பு அனைத்து விவசாயிகளுக்கும் புதிய விவசாய கடன் வழங்க வேண்டும், விவசாய இடுபொருட்கள் தடையின்றி கிடைக்க வேண்டும், விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும், 144 தடையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு விதைநெல் மற்றும் இடுபொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது. 

திருத்தங்கூரில் வடக்கு ஒன்றிய செயலாளர் பாலகுரு, கச்சனம் ஒன்றிய பொருளாளர் சிவகுமார், மணலியில் ஒன்றியதலை வர் இராஜேந்திரன், தெற்கு ஒன்றியம் சார்பில் பிச்சன்கோட்டகத்தில் ஒன்றிய செயலாளர் மணியன் மற்றும் கொக்கலாடி, மேட்டுப்பாளையம், எழிலூர், ஆதிரெங்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT