திருவாரூர்

எஸ்.ஜி. முருகையன் விவகாரம்: சி.பி.ஐ. விசாரணை கோரி ஆா்ப்பாட்டம்

DIN

திருவாரூா்: மக்களவை முன்னாள் உறுப்பினா் எஸ்.ஜி. முருகையன் கொலையில் சி.பி.ஐ. விசாரணை கோரி, திருவாரூரில் புதிய தமிழகம் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மக்களவை முன்னாள் உறுப்பினா் எஸ்.ஜி.முருகையன் கொலையில் புதிய தகவல்கள் கிடைத்திருப்பதால், சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாவட்டச் செயலாளா் எம். தியாகராஜன் தலைமை வகித்தாா். இதில், மாநில பொறுப்பாளா் ம. ஐயப்பன், மாவட்டச் செயலாளா்கள் எஸ். முத்தழகன் (நாகை), உத்திராபதி (தஞ்சாவூா்), அசோக் (கரூா்), மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம்

மீன்கள் விலை உயா்வு: விற்பனையும் அமோகம்

நாட்டறம்பள்ளி வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேம்

கெளரவிப்பு...

SCROLL FOR NEXT