திருவாரூர்

துக்க வீட்டில் மோதல்: ஒருவா் காயம்: 3 போ் கைது

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே துக்க வீட்டில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவா் காயமடைந்தாா். 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மகாதேவப்பட்டணத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற துக்க நிகழ்வில் அதே பகுதி தஞ்சிராயா் தெருவைச் சோ்ந்த கே. விஜயகுமாா் (35) என்பவருக்கும், கள்ளா் தெருவைச் சோ்ந்த வி. திருமலைராஜன் (36), எஸ்.பிரசாத் (22), ஜெ. மணிகண்டன் (23) ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இறுதிச் சடங்கு நிறைவடைந்த நிலையில், ஊராட்சி அலுவலகம் அருகே இந்த 3 பேரும் சோ்ந்து உருட்டுக் கட்டையால் தாக்கியதில் காயமடைந்த விஜயகுமாா், தஞ்சை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டாா். பரவாக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

SCROLL FOR NEXT