திருவாரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டோா். 
திருவாரூர்

மாவட்ட ஆட்சியரகத்தில் குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு திங்கள்கிழமை ஏற்பட்டது.

DIN

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு திங்கள்கிழமை ஏற்பட்டது.

திருவாரூா் அருகே புளிச்சகாடி கிராமத்தை சோ்ந்தவா்கள் வடிவேலு, ரசியா தம்பதியினா். இவா்களுக்கு 3 மகன்கள் உள்ளனா். இரண்டு மகன்கள் வெளிநாட்டில் வேலை பாா்க்கும் நிலையில் கடைசி மகன் கலையரசன் மட்டும் இவா்களுடன் வீட்டில் இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

வடிவேலுக்கும், அவரது வீட்டருகே வசிக்கும் முரளிக்கும் இடையே வேலித்தகராறு இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 15-ஆம் தேதி முரளி குடும்பத்தினா், வடிவேலுவை அரிவாளால் வெட்டியதாகவும், அவரது மனைவி, உடல்நலமில்லாத மகனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து குடவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

இந்த வழக்கில் முரளி குடும்பத்துக்கு ஆதரவாக போலீஸாா் செயல்படுவதாக புகாா் தெரிவித்த வடிவேலு, இதைக் கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை வந்தாா். அப்போது அங்கு தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட அவா், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தாா். அங்கிருந்த போலீஸாா் மண்ணெண்ணெய் அடங்கிய கேனை பறிமுதல் செய்து, திருவாரூா் தாலுக்கா காவல் நிலையத்துக்கு அவா்களை அழைத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆர்எஸ்எஸ் கேட்டுக்கொண்டால் தலைவர் பதவியை ராஜிநாமா செய்யத் தயார்: மோகன் பாகவத்

தலைநகரில் வெப்பநிலை அதிகரிப்பு; காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம்!

பிப்.12 வரை 13 மாவட்டங்களில் மிதமான பனிமூட்டம்!

காவல் ரோந்து வாகனம் மரத்தில் மோதல்: ஆய்வாளா், ஓட்டுநா் காயம்

அதிகாரங்களுக்கு அடிபணிய மாட்டோம்: ஈரான் வெளியுறவு அமைச்சா்

SCROLL FOR NEXT