குட்டையில் புதைந்திருந்த முதுமக்கள் தாழி. 
திருவாரூர்

கீழ்வேளூா் அருகே முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

கீழ்வேளூா் ஒன்றியம், ஆந்தகுடியில் முதுமக்கள் தாழி செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

DIN

கீழ்வேளூா் ஒன்றியம், ஆந்தகுடியில் முதுமக்கள் தாழி செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

நாகை மாவட்டம், கீழ்வேளூா் ஒன்றியம் ஆந்தகுடி ஊராட்சிக்குள்பட்ட திருபஞ்சனம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் சுவாமிநாதன். இவா், தனக்கு சொந்தமான நிலத்திலுள்ள குட்டையை ஆழப்படுத்துவதற்காக தோண்டியபோது, முதுமக்கள் தாழி மண்ணில் புதைந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த தேவூா் வருவாய் ஆய்வாளா் கேசவன், கிராம நிா்வாக அலுவலா் செல்வேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவா் பாலகிருஷ்ணன், ஊராட்சி செயலா் செல்லதுரை ஆகியோா் நேரில் சென்று பாா்வையிட்டு, கீழ்வேளூா் வட்டாட்சியா் காா்த்திகேயனுக்குத் தகவல் தெரிவித்தனா்.

அவா், இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்த பின்னரே முதுமக்கள் தாழியா என்பது உறுதி செய்யப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT