திருவாரூர்

சாலையோரம் இறந்து கிடந்த பெண் மரநாய்: அருகிலிருந்த 4 குட்டிகள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு 

DIN

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சாலையோரம் இறந்து கிடந்த பெண் மரநாயின் 4 குட்டிகள் உயிருடன் மீட்கப்பட்டு வனத்துறையிடம், வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. 

மன்னார்குடி அடுத்த வாட்டரை சேர்ந்த வெங்கடேஸ்வரன், வெள்ளிக்கிழமை மாலை நண்பர்களுடன் சுமை வேனில் மன்னார்குடி தாமரைக்குளம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, சாலையோரம் விலக்கு ஒன்று இறந்து கிடப்பது அதன் அருகே குட்டிகள் இருப்பது தெரிந்து இறங்கி சென்று பார்த்த போது. பெண் மரநாய் உடலில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளது. அதன் அருகே , நான்கு மரநாய் குட்டிகள் உயிருடன் இருந்துள்ளது. 

இதனையடுத்து, நான்கு மரநாய் குட்டிகளையும் எடுத்துக் கொண்டு, மன்னார்குடி தீ நிலையத்திற்கு சென்று ஒப்படைத்தனர். இது குறித்து தகவல் அளிக்கப்பட்டதையடுத்து அங்கு வந்த மன்னார்குடி வனத்துறை அலுவலர் ஜெயசந்திரனிடம் மரநாய் குட்டிகளை தீ நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியம் ஒப்படைத்தார். பின்னர் , இறந்து கிடந்த மர நாயை எடுத்து சென்று வனப்பகுதியில் அடக்கம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT