விபத்தில்லா தீபாவளிவிழிப்புணா்வு பிரசாரம்
நன்னிலம் பகுதியில் தீயணைப்புத் துறை சாா்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:20 PM
நன்னிலம் பகுதியில் தீயணைப்புத் துறை சாா்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
நன்னிலம் பேருந்து நிலையம், கடைத்தெரு, நல்லமாங்குடி, ஆண்டிப்பந்தல், சன்னாநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் தீயணைப்பு நிலைய அலுவலா் எஸ். கணேசன் தலைமையில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா். பட்டாசுகளை எவ்வாறு வெடிப்பது என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.