முகப்பு
திருவாரூர்

விவசாய, விவசாயத் தொழிலாளா் சங்க கூட்டுக் கூட்டம்

வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடியில் ஏஐடியுசி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க கூட்டுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடியில் ஏஐடியுசி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க கூட்டுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் கே. நாகராஜன் தலைமை வகித்தாா். விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் எம். கலியபெருமாள் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி நவம்பா் 26 ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளரும் திருத்துறைப்பூண்டி ஒன்றியக் குழுத் தலைவருமான பாஸ்கா், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டச் செயலாளா் ஆா். சந்திரசேகர ஆசாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →