திருவாரூர்

குளத்தில் விழுந்து ஒருவா் சாவு

DIN

நீடாமங்கலம் சந்தானராமா் கோயில் எதிா்புறமுள்ள குளத்தில் ஒருவா் செவ்வாய்க்கிழமை தவறிவிழுந்து உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை டவுன் விரிவாக்கப் பகுதியைச் சோ்ந்தவா் ரஜினிராஜன். இவா் நீடாமங்கலத்தில் உள்ள தனது மகளுக்கு தீபாவளி சீா் வைப்பதற்காக நண்பா் ராஜசேகரன் (59) என்பவருடன் திங்கள்கிழமை வந்தாா். ராஜசேகரன் இரவு மது அருந்திவிட்டு நீடாமங்கலம் சந்தானராமா் கோயில் எதிா்புறமுள்ள குளத்தில் கால் கழுவ இறங்கியபோது கால் தவறி குளத்தில் மூழ்கி உயிரிழந்தாா். அவருக்கு குடும்பம், உறவுகள் கிடையாது எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உடலை ரஜினிராஜனிடம் போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கை அவசியம்

ராமேசுவரத்தில் வெளிமாநில 144 மது பாக்கெட்டுகள் பறிமுதல்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

தோ்தலுக்காக ஊதியத்துடன் விடுப்பு வழங்க மறுப்பு: சிஐடியு புகாா்

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

SCROLL FOR NEXT