அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடித்து, பாதுகாப்பாக தீபாவளிப் பண்டிகையை கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தீபாவளிப் பண்டிகையின்போது, கரோனா நோய் பரவலைத் தடுக்கும் வகையில், அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள உரிய சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். மேலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, அனுமதிக்கப்பட்ட ஒலி அளவுள்ள வெடிகள் மற்றும் காற்றை மாசுபடுத்தாத பட்டாசு வகைகளை பயன்படுத்த வேண்டும்.
அத்துடன், அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.