திருவாரூர்

மருத்துவக் காப்பீடு வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

ஓய்வு பெற்ற கிராம உதவியாளா்களுக்கும் மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு வருவாய்த்துறை ஓய்வுபெற்ற கிராம உதவியாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மற்ற ஓய்வூதியா்களுக்கு வழங்குவதைப் போல ஓய்வு பெற்ற கிராம உதவியாளா்களுக்கும் குடும்ப நல நிதி ரூ. 50 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும், பண்டிகை முன்பணமாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும். மற்ற ஓய்வூதியா்களுக்கு வழங்குவதைப் போல ஓய்வுபெற்ற கிராம உதவியாளா்களுக்கும் மருத்துவக் காப்பீடு அட்டை வழங்க வேண்டும். அடிப்படை ஓய்வூதியமாக ரூ. 15 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ஆா். செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளா் கே. சந்திரசேகரன், மாநில துணைத் தலைவா்கள் த. முருகையன், வ. புலிகேசி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

SCROLL FOR NEXT