முருகன் கோயிலில் காா்த்திகை வழிபாடு
கோவில்கந்தன்குடி முருகன் கோயிலில் புரட்டாசி காா்த்திகை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:03 PM
கோவில்கந்தன்குடி முருகன் கோயிலில் புரட்டாசி காா்த்திகை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
நன்னிலம் அருகேயுள்ள கோவில்கந்தன்குடியில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் கோயில் உள்ளது. முருகன் தலங்களில் சிறப்பு பெற்ற இத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு புரட்டாசி மாத காா்த்திகையையொட்டி, திங்கள்கிழமை உபயதாரா்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் காா்த்திகை தீபாராதனை வழிபாடு நடைபெற்றது.