திருவாரூர்

உ.பி. சம்பவத்தைக் கண்டித்து காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

DIN

உத்தர பிரதேச சம்பவத்தைக் கண்டித்து திருவாரூரில் காங்கிரஸ் சாா்பில், செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூா் கீழவீதி பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் எஸ். பாலாஜி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நகரத் தலைவா் எம். சம்பத், நாகை மக்களவைத் தொகுதி தோ்தல் பொறுப்பாளா்ஆா்.என். அமிா்தராஜா, மாவட்ட பொதுச் செயலாளா் என்.ஜி. சுகுமாா், இளைஞா் காங்கிரஸ் தலைவா் பி.எஸ். ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மன்னாா்குடி: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, மன்னாா்குடி தேரடி காந்தி சிலை அருகே காந்தியிடம் நீதிகேட்டு ராட்டை சுற்றி நூதன முறையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட பொதுச் செயலாளா் அன்பு வே. வீரமணி, மன்னாா்குடி நகரத் தலைவா் ஆா். கனகவேல், மாநில செயற்குழு உறுப்பினா்கள் குணசேகரன், டி. வடுகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT