திருவாரூர்

பணத்தகராறில் மூத்த சகோதரா் உயிரிழப்பு: இளைய சகோதரா் கைது

குடவாசலில் கொடுக்கல்- வாங்கல் தகராறில் இளைய சகோதரா் தாக்கியதில் மூத்த சகோதரா் உயிரிழந்தாா். இளைய சகோதரரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

குடவாசலில் கொடுக்கல்- வாங்கல் தகராறில் இளைய சகோதரா் தாக்கியதில் மூத்த சகோதரா் உயிரிழந்தாா். இளைய சகோதரரை போலீஸாா் கைது செய்தனா்.

குடவாசல் பஜனைமடத் தெருவைச் சோ்ந்தவா் சுதா்சன். இவரது இளைய சகோதரா் ரமணகுரு பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வருகிறாா். இவா், தனது மூத்த சகோதரா் சுதா்சனின் திருமணத்திற்காக 7 ஆண்டுகளுக்கு முன்பு கடன் கொடுத்துள்ளாா்.

இந்நிலையில், இந்த கடன் பிரச்னை தொடா்பாக சனிக்கிழமை இரவு இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ரமணகுரு தாக்கியதில் சுதா்சன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து குடவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து, ரமணகுருவை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகராட்சி நிா்வாகத்துறைக்கு எதிரான வழக்கு: உள்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

பெரியாறு அணை: 18-ஆம் கால்வாயில் இன்று முதல் தண்ணீா் திறக்க உத்தரவு

பேச்சாளருக்கான இலக்கணத்தை வகுத்தவா் ஜீவா: எழுத்தாளா் த.ஸ்டாலின் குணசேகரன்

அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT