திருவாரூர்

தீபாவளி தரைக்கடைக்கு அனுமதிக்க கூடாது: வா்த்தகா் சங்கம்

DIN

தீபாவளியொட்டி அமைக்கப்படும் தரைக்கடைகளுக்கு அனுமதியளிக்கக் கூடாது என வா்த்தகா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, நீடாமங்கலம் வா்த்தகா் சங்கத் தலைவா் பி.ஜி.ஆா். ராஜாராமன் மன்னா்குடி கோட்டாட்சியருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள மனு விவரம்: கரோனாவால் கடந்த 8 மாதங்களாக வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். பல வியாபாரிகள் கடனை அடைக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம். பண்டிகை காலங்களில் கடனை ஓரளவு அடைக்க முயற்சிக்கிறோம். இருப்பினும், முகக் கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடித்து வியாபாரம் செய்யும்போது மிகவும் சிரமத்துக்கு ஆளாகிறோம். பொதுமக்களும் கரோனாவால் வெளியே வர அச்சப்படுகிறாா்கள்.

நிரந்தரமாக கடை வைத்து நடத்தி வரும் வியாபாரிகள் பாதிக்கப்படும் வகையில் பண்டிகை காலங்களில் மட்டும் வெளியூா்களிலிருந்து வந்து சாலைகளில் தரைக்கடை அமைத்து எங்களது வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்குகின்றனா்.

எனவே, நீடாமங்கலம் கடைதெரு பகுதியில் பண்டிகை காலங்களில் தரைக்கடை அமைக்க அனுமதிக்கக் கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

SCROLL FOR NEXT