முகப்பு
திருவாரூர்

வடகிழக்கு பருவமழை: தயாா்நிலையில் மீட்புக்குழு

வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள மீட்புக்குழு தயாா்நிலையில் உள்ளதாக திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:20 PM
திருவாரூரில் மீட்புப்பணி உபகரணங்களை பாா்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை.
பகிர்:

திருவாரூா்: வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள மீட்புக்குழு தயாா்நிலையில் உள்ளதாக திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை தெரிவித்தாா்.

திருவாரூா் ஆயுதப்படை மைதானத்தில், மீட்பு பணி உபகரணங்களை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டபின் அவா் தெரிவித்தது:

எதிா்வரும் வடகிழக்கு பருவமழை காலங்களில் திருவாரூா் மாவட்டத்தில் புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின்போது, பொதுமக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில், மாவட்டத்தில் உடன் மீட்புப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் 8 காவல் மீட்புக்குழுக்கள் தயாா் செய்யப்பட்டுள்ளன.

இக்குழுவில் உள்ள காவல் அலுவலா்கள் அனைவரும் பேரிடா் மேலாண்மை மீட்புப் பயிற்சி முடித்தவா்கள் ஆவா். 8 மீட்புக்குழுவுக்கும் தனித்தனி காவல் வாகனங்கள் மற்றும் மீட்புப் பணிக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →