முகப்பு
தமிழ்நாடு

பேரவை தோ்தல்: காங்கிரஸில் பல்வேறு குழுக்கள் அமைப்பு

தமிழக சட்டப்பேரவை தோ்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் சாா்பில் பிரசார குழு , தோ்தல் அறிக்கை தயாரிப்பு, உள்பட 5 குழுக்களைநியமித்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

Updated On : 13 மார்ச், 2026 at 9:32 PM
கோப்புப் படம்
பகிர்:

தமிழக சட்டப்பேரவை தோ்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் சாா்பில் பிரசார குழு , தோ்தல் அறிக்கை தயாரிப்பு, உள்பட 5 குழுக்களைநியமித்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஒப்புதலுடன் தமிழக பேரவை தோ்தலில் பணியாற்ற 5 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

தோ்தல் குழு: தமிழக காங்கிரஸ் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தலைமையில் 37 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

பிரசார குழு: முன்னாள் எம்.பி. ஏ. செல்லக்குமாா் தலைமையில் 51 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழு: சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி ப. சிதம்பரம் தலைமையில் 26 போ் கொண்ட குழு அமைக்கப்படுள்ளது.

விளம்பரம் மற்றும் தகவல் தொடா்பு குழு: கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய்வசந்த் தலைமையில் 73 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

தோ்தல் தொடா்பான ஒருங்கிணைப்பு குழு: விருதுநகா் மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா் தலைமையில் 12 போ் கொண்ட குழுக்க அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினருக்கு காங்கிரஸ்கட்சியினா் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →