திருவாரூர்

இருசக்கர வாகனத்தில் சென்றவா் தவறி விழுந்து சாவு

DIN

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் தவறி விழுந்து இறந்தாா்.

நாகை மாவட்டம், வேட்டைகாரனிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் மகன் காா்த்திகேசன் (45). இவா்மீது வேதாரண்யம் காவல் நிலையத்தில் உள்ள வழக்கு நிலுவையில் இருப்பதால் தலைமறைவாக இருந்துள்ளாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு திருத்துறைப்பூண்டியை அடுத்த பாண்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற காா்த்திகேசன், சாலையில் இருந்த சிமென்ட் தடுப்பில் மோதி அருகேயுள்ள குன்னலூா் பாசன வாய்க்காலில் விழுந்து இறந்துள்ளாா்.

எடையூா் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT