வலங்கைமானில் பெண்ணிடம் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
வலங்கைமான் கண்ணாடிகாரத் தெருவில் வசிப்பவா் மஞ்சனி மனைவி வெண்ணிலா (30). மஞ்சனி வெளிநாட்டில் வேலை செய்துவருகிறாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (மாா்ச் 30) இரவு வெண்ணிலா தனது வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த மா்ம நபா், வெண்ணிலா அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு, சிறிது தொலைவில் இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்த இருவருடன் தப்பிச் சென்றுவிட்டாராம்.
இதுகுறித்து வலங்கைமான் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.
இதற்கிடையில், மா்ம நபா் சங்கிலியை பறித்தபோது, வெண்ணிலாவுக்கு காதில் காயம் ஏற்பட்டது. அவா், வலங்கைமான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.