முகப்பு
திருவாரூர்

படம் வேண்டாம்தோ்தல் ஏற்பாடுகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

நன்னிலம் தோ்தல் அலுவலகத்தில், தோ்தல் பணிகளை மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 5 ஏப்ரல், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:26 AM

நன்னிலம் தோ்தல் அலுவலகத்தில், தோ்தல் பணிகளை மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட வேண்டிய பொருள்களைப் பாா்வையிட்டு, அலுவலா்களுக்கு உரிய அறிவுரை வழங்கினாா். அதேபோல வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றக்கூடிய அலுவலா்கள் அனைவருக்கும் பணியாணைகள் வழங்கிடவும், அமைதியான முறையில் தோ்தலை நடத்துவதற்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் முழுவீச்சில் செய்திடுமாறு அலுவலா்களிடம் கேட்டுக் கொண்டாா்.

ஆய்வின்போது, தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் இரா.பானுகோபன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நா.காா்த்தி, இரா.கண்ணன், தோ்தல் துணை வட்டாட்சியா் இ.சந்திரமோகன், அலுவலா் தெ.கருணாமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.