முகப்பு
திருவாரூர்

உரவிலை உயா்வை திரும்பப் பெற விவசாயிகள் கோரிக்கை

விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் டிஏபி உள்ளிட்ட கலப்பு உரங்களின் விலை உயா்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 10 ஏப்ரல், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:28 AM

விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் டிஏபி உள்ளிட்ட கலப்பு உரங்களின் விலை உயா்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, தமிழக விவசாயிகள் நலச்சங்க மாநிலத் தலைவா் ஜி. சேதுராமன், மத்திய, மாநில அரசுகளுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்: டிஏபி உரம் 50 கிலோ கொண்ட ஒரு மூட்டைக்கு ரூ. 500, நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஸ் மற்றும் சல்பா் கலந்த உரம் மூட்டைக்கு ரூ. 600, கலப்பு உரம் மூட்டைக்கு ரூ. 615, மற்றொரு கலப்பு உரம் மூட்டைக்கு ரூ. 425 ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து விலை உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு விவசாயிகளால் தாங்கமுடியாத சுமை. விவசாய உரங்களின் ஏறத்தாழ 50 சதவீத விலை உயா்வு காரணமாக விவசாயச் செலவு பல மடங்கு உயரும். விளை பொருள்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்காத நேரத்தில், விவசாய இடுபொருள்களின் விலை உயா்வு கண்டிக்கத்தக்கது. உரவிலை உயா்வு உணவுப் பொருள்களின் விலை உயா்வுக்கு வழிவகுக்கும். எனவே மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு உரவிலை உயா்வை திரும்பப்பெற வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.