ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு
நன்னிலம் அருகே காதுகேளாத முதியவா் வியாழக்கிழமை இரவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:28 AM
நன்னிலம் அருகே காதுகேளாத முதியவா் வியாழக்கிழமை இரவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
நாகை மாவட்டம், ராராந்திமங்களத்தைச் சோ்ந்த காதுகேளாத மாற்றுத்திறனாளி கோபால் (65.). இவா், வியாழக்கிழமை இரவு தனது ஊருக்கு அருகில் உள்ள, திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகே ஆண்டிபந்தல் வடகரை கிராமம், புத்தாற்றுப் பாலம் பகுதியில் தண்டவாளத்தை கடந்துள்ளாா். அப்போது, திருவாரூரில் இருந்து சென்னை சென்ற ரயில்மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, தகவலறிந்த ரயில்வே காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து கோபாலின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.