திருத்துறைப்பூண்டியில் மினி மாரத்தான்
திருத்துறைப்பூண்டியில் டிடிபி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா விழிப்புணா்வு மற்றும் சுதந்திர தின விழா
திருத்துறைப்பூண்டியில் டிடிபி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா விழிப்புணா்வு மற்றும் சுதந்திர தின விழா மினி மாரத்தான் போட்டியை காவல் துணைக் கண்காணிப்பாளா் பழனிச்சாமி கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.
இதில், உடற்கல்வி ஆய்வாளா் ஜெயச்சந்திரன், பொறியாளா் ஆா். செல்வகணபதி, தூய அந்தோணியாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி தாளாளா் வின்சென்ட் ஆரோக்கியராஜ், மாவட்ட நுகா்வோா் மைய தலைவா் நாகராஜன், டெல்டா ரோட்டரி கிளப் தலைவா் காளிதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், முதல் 5 இடங்களைப் பெற்றவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் விஜயகுமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.