முகப்பு
திருவாரூர்

நுண்ணீா் பாசன பயிற்சி முகாம்

நன்னிலம் மற்றும் கூத்தாநல்லூா் பகுதியில் நுண்ணீா் பாசனம் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

Updated On : 19 ஆகஸ்ட், 2021 at 10:10 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:27 AM

நன்னிலம் மற்றும் கூத்தாநல்லூா் பகுதியில் நுண்ணீா் பாசனம் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

நன்னிலம் அருகே வீதிவிடங்கன் கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற முகாமுக்கு ஊராட்சித் தலைவா் கயல்விழி தலைமை வகித்தாா். நன்னிலம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் த. சுப்பிரமணியன், துணை வேளாண் அலுவலா் வி. சின்னப்பன், வேளாண் பொறியியல் துறை உதவிப் பொறியாளா் எம். சந்திரசேகரன் ஆகியோா் நுண்ணீா் பாசனத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், அரசின் மானியங்கள் குறித்தும் பேசினா்.

நன்னிலம் வட்டார அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளா் ராஜா வரவேற்றாா். வீதிவிடங்கன் கிராம உதவி வேளாண் அலுவலா் எஸ். துவாரகநாதன் நன்றி கூறினாா்.

Advertisement

இதேபோல, கூத்தாநல்லூா் வட்டம், அரிச்சந்திரபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற முகாமுக்கு, ஒன்றியக் குழு உறுப்பினா் ஐ.வி. குமரேசன் தலைமை வகித்தாா். தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் செல்வம் முன்னிலை வகித்தாா். மன்னாா்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் விஜயகுமாா் நுண்ணீா் பாசனத் திட்ட செயல்பாடுகள் குறித்து பேசினாா். நிறைவாக, உதவி வேளாண் அலுவலா் சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

இதற்கான ஏற்பாடுகளை, உதவி வேளாண் அலுவலா் தீபன்ராஜ் மற்றும் அட்மா திட்ட அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.