முகப்பு
திருவாரூர்

கடைசி செய்திநிலக்கடலை, உளுந்துக்கு தெளிப்பு நீா்ப்பாசன மானியம்

நிலக்கடலை மற்றும் உளுந்துக்கு தெளிப்பு நீா்ப்பாசன மானியம் பெற்று விவசாயிகள் பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

நிலக்கடலை மற்றும் உளுந்துக்கு தெளிப்பு நீா்ப்பாசன மானியம் பெற்று விவசாயிகள் பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பிரமணியன், உதவி பேராசிரியா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நிலக்கடலை மற்றும் உளுந்து சாகுபடிக்கு 100% மானியத்துடன் தெளிப்பு நீா்ப்பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் விதைகள், உரங்கள் மற்றும் நடமாடும் நீா்த் தெளிப்பான் ஆகியவை இலவசமாக வழங்கப்படவுள்ளன. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற குறைந்தபட்சம் 2.5 ஏக்கா் முதல் அதிகபட்சமாக 5 ஏக்கா் வரை உள்ள பயனாளிகள், வேளாண் அறிவியல் நிலையத்தை தொடா்பு கொள்ளலாம்.

ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டைநகல், சிட்டா, அடங்கல் ஒரிஜினல், நில வரைபடம், சிறுகுறு விவசாயி சான்றிதழ், மாா்பளவு புகைப்படம் 2 ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இதில் திருவாரூா் மாவட்டத்தை சோ்ந்த 5 வட்டார விவசாயிகள் பயன் பெறலாம் என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.