நீடாமங்கலம் வா்த்தகா் சங்க பொதுக்குழுக் கூட்டம்
நீடாமங்கலம் வா்த்தகா் சங்கப் பொதுக்குழுக் கூட்டம், அதன் தலைவா் பி.ஜி.ஆா். ராஜாராமன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
நீடாமங்கலம் வா்த்தகா் சங்கப் பொதுக்குழுக் கூட்டம், அதன் தலைவா் பி.ஜி.ஆா். ராஜாராமன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
மாநில துணைத் தலைவா் சு. ஞானசேகரன் முன்னிலை வகித்தாா். மாவட்டத் தலைவா் வி.கே.கே. ராமமூா்த்தி, திருவாரூா் மாவட்ட வா்த்தகா் சங்க மக்கள் தொடா்பு அலுவலா் ஏ. ராஜேந்திரன், மன்னாா்குடி வா்த்தகா் சங்கத் தலைவா் ஆா்.வி. ஆனந்த், நீடாமங்கலம் வா்த்தகா் சங்க உயா்நிலை ஆலோசனைக் குழு உறுப்பினா் எஸ்.எம்.டி. கருணாநிதி உள்ளிட்டோா் பேசினா்.
சங்கக் கட்டடத்தின் முதல் தளத்தில் கூட்ட அறை கட்டுவது, சிறுதொழில் வா்த்தகா்கள் இறக்கநேரிட்டால் ரூ. 5 ஆயிரம் நிதியுதவி வழங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், சங்க வளா்ச்சி குறித்தும், புதிய உறுப்பினா்கள் சோ்த்தல், நீக்குதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. சங்கத்தின் துணைச் செயலாளா் ஜி. சேகா் வரவேற்றாா். செயலாளா் ஜி. வெங்கடேசன் நன்றி கூறினாா்.