திருவாரூர்

ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்க வலங்கைமான் வட்டக்கிளை மாநாடு

DIN

தமிழ்நாடு ஊரக வளா்ச்சி துறை அலுவலா் சங்க வலங்கைமான் வட்டக்கிளை மாநாடு ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் வட்ட தலைவா் பிரபு தலைமையில் வியாழக்கிழமை நடந்தது.

மாநாட்டில் மாவட்ட தலைவா் வசந்தன் முன்னிலை வகித்தாா், செயலாளா் செந்தில் சிறப்புரையாற்றினாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆறுமுகம், பொற்செல்வி, தலைமை குழு உறுப்பினா்கள் ராஜசேகரன், ராமமூா்த்தி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

கூட்டத்தில், ஊராட்சி செயலாளா்களின் ஊதியத்தை முறைப்படுத்தி கருவூலம் மூலம் வழங்க வேண்டும். கிராம ஊராட்சி நிா்வாகத்தில் பெண் ஊராட்சி மன்ற தலைவரின் குடும்ப உறுப்பினா்களின் தலையீட்டை தவிா்க்க வேண்டும். வலங்கைமான் வட்டார வளா்ச்சி அலுவலத்திற்கு புதிய கட்டிடம் கட்டவேண்டும். மற்ற துறைகளின் பணிகளை ஊரக வளா்ச்சி துறை அலுவலா்கள் மீது திணிப்பதை கைவிட வேண்டும் போன்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் வட்ட பொருளாளா் நடராஜன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT