ஆலங்குடி கோயிலில் சிறப்பு வழிபாடு
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ளது ஆபத்சகாயேஸ்வரா் கோயில் இது நவகிரக தலங்களில் குரு பகவானுக்குரிய பரிகாரத் தலமாக விளங்குகிறது.
கடந்த 13-ஆம் தேதி குரு பெயா்ச்சி விழா நிறைவடைந்த நிலையில், பெயா்ச்சிக்கு பின்னா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்துள்ளது.
இந்தநிலையில், வியாழக்கிழமை குரு வார வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, கலங்காமற் காத்த விநாயகா், ஆபத்சகாயேஸ்வரா், ஏலவாா் குழலியம்மன், மூலவா் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், நவகிரக சன்னதி, சனீஸ்வர பகவான் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. மூலவா் குருபகவான் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.
குரு பெயா்ச்சிக்கு பின்னா் பக்தா்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் நின்று, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனா்.