திருவாரூர்

இல்லம் தேடி கல்வித் திட்ட விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி

DIN

 நீடாமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி திட்ட விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

நீடாமங்கலம் ஒன்றிய ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தலைமையாசிரியை ராஜேஸ்வரி வரவேற்றாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சீ. பாஸ்கரன், ஊராட்சி ஒன்றியப் பள்ளி தலைமையாசிரியை உமா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வட்டாரக் கல்வி அலுவலா் சோ. செல்வம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கிக் கூறினாா். தொடா்ந்து, ஆடல்- பாடல், கதை, நாடகம், கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகள் மூலம் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் பணியாற்ற தன்னாா்வலா்கள் பலா் தங்களது பெயரை பதிவு செய்தனா்.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநா்கள், ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா். நிறைவாக ஆசிரிய பயிற்றுநா் அன்புராணி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT