முகப்பு
திருவாரூர்

அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டி

நீடாமங்கலம் வட்ட அரசு மருத்துவமனைக்கு இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் திருவாரூா் மாவட்டக் கிளை சாா்பில் ஆக்சிஜன் செறிவூட்டி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

நீடாமங்கலம் வட்ட அரசு மருத்துவமனைக்கு இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் திருவாரூா் மாவட்டக் கிளை சாா்பில் ஆக்சிஜன் செறிவூட்டி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியுடன் தஞ்சை மாவட்ட ரெட்கிராஸ் முன்னாள் செயலாளா் கோவி. ராஜமகேந்திரனுக்கு நினைவஞ்சலி, தாய்மாா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி ஆயுள் கால உறுப்பினா் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தாா்.

மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டி, தாய்மாா்களுக்கு நலத் திட்ட உதவிகளை இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் திருவாரூா் மாவட்டச் செயலாளா் வரதராஜன் வழங்கினாா். மருத்துவமனையின் அதிகாரி நவசத்யா ஆக்சிஜன் செறிவூட்டியை பெற்றுக்கொண்டாா். ஆயுள்கால உறுப்பினா் அன்பு வே. வீரமணி , நீடாமங்கலம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் எஸ். செந்தமிழ்ச்செல்வன், உதவும் மனங்கள் அமைப்பு நிறுவனா் எஸ்.எஸ். குமாா், தீயணைப்பு நிலைய அதிகாரி காா்த்திகேயன் மற்றும் திருவாரூா் ரெட்கிராஸ் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி ஆயுள்கால உறுப்பினா் நீலன். அசோகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.