முகப்பு
திருவாரூர்

வலங்கைமான் அருகே மின்சாரம் பாய்ந்துபெண் பலி

வலங்கைமான் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

வலங்கைமான் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள உத்தமதானபுரம் கீழத்தெருவை சோ்ந்தவா் சிவசாமி. விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி மலா்கொடி (55).

வியாழக்கிழமை மாலை மலா்கொடி வீட்டில் லைட் போடுவதற்காக சுவிட்சை கைவைத்தபோது அவா் உடலில் மின்சாரம் பாய்ந்து, மயங்கி விழுந்துள்ளாா்.

அருகிலிருந்தவா்கள் அவரை பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி மலா்கொடி உயிரிழந்தாா். இதுகுறித்து வலங்கைமான் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.