திருவாரூர்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் ஆருத்ரா தரிசன விழா

DIN

நீடாமங்கலம்: நவக்கிரகஸ்தலங்களில் ஒன்றாகப்போற்றப்படும் வலங்கைமான்  அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் ஆருத்ரா தரிசன விழா திங்கட்கிழமை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு நடராஜப் பெருமான், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகருக்கு சிறப்பு  அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ஹரிஹரன், செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

இதேபோல் நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோயிலில் அதிகாலையில் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. நடராஜப்பெருமான், சிவகாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. சிவகண வாத்தியங்கள் முழங்க சுவாமி வீதியுலாவும்,
அதனைத் தொடர்ந்து தேவாரம் திருவாசகம் முற்றோதல் நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆருத்ரா தரிசன விழாவையொட்டி வீதியுலா வந்த நடராஜப்பெருமான்.

பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோயில், நீடாமங்கலம் கோகமுகேஸ்வரர் கோயில், நரிக்குடி எமனேஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT